போட்டிப்பரீட்சையில் தோற்றியோர் குறித்த மகஜர் கையளிப்பு

ஆசிரியர் போட்டிப்பரீட்சை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் போட்டிப்பரீட்சையில் என்பவற்றில் சித்தியடைந்தவர்களின் பிரச்சினைகளை உள்ளடக்கப்பட்ட மகஜர் ஒன்று கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெருமவிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டது.

ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினால் இம்மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட கல்வியமைச்சர் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதாக ஒன்றிணைந்த பட்டதாரகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார்.

போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பிரச்சினைகளுக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்து சங்கத்தின் எதிர்கால நடவடிக்கை அமையும் என்று ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் தென்னே ஞானாந்தன தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435