மட்டக்குளிய – சொய்ஸாபுர 155 பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மட்டக்குளிய – சொய்சாபுர பொது போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் 155 பஸ் ஊழியர்கள் இன்று (20) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பஸ் சேவையில் ஈடுபடும் சாரதியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இப்பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விடுவிக்கப்படும் வரையில் இப்பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என்று சொய்ஸாபுர- மட்டக்குளிய பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கமல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்/ அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435