மத்திய கிழக்குக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாய கருத்தடை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கை பணிப்பெண்களை கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துமாறு வேலைவாய்பு முகவர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வற்புறுத்தி வருகின்றனர் என்று பாதிக்கப்பட்ட பெண்களை மேற்கோள்காட்டி ‘கார்டியன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து மத்திய கிழக்குக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் பெண்களை இலக்கு வைக்கும் முகவர்கள் அவர்களை கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

நாங்கள் அனுப்பும் பெண்கள் மூன்று மாத காலத்துக்கு கர்ப்பம் தரிக்கமாட்டார் என்ற உத்தரவாதத்தை வழங்குவதாக இலங்கை வேலைவாய்பபு பணியகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட ஆறு முகவர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்குக்கு வேலைக்காக பெண்ணொருவரை அனுப்புவதற்கு முன்னர் அரசு மருத்துவ பரிசோதனையொன்றை நடத்தும். அதன் முடிவுகளில் யாரும் தலையிட முடியாது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மூன்று மாத காலத்துக்குக் கருத்தரிப்பதை தடுக்ககூடிய டெப்போ புரோவரா என்ற ஊசியை பல முகவர் நிறுவனங்கள் பயன்படுத்துவது கார்டியனின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435