மத்திய மாகாணசபைக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தும் இதுவரை நியமனம் கிடைக்காத பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களில் இணைக்குமாறு கோரி மத்திய மாகாணசபைக்கு முன்பாக இன்று (05) ஆர்ப்பட்டமொன்றை மேற்கொள்ள ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை தொகுதியில் தற்போது பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பாளர் சங்கைக்குரிய பூஜ்யதென்னே ஞானானந்த தேரர் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ளார்.

பெரும் எண்ணிக்கையான வேலையில்லா பட்டதாரிகள் தற்போது தொழிலுக்காக ஏங்கி வரும் நிலையில் ஆசிரியர் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு அவர்களை இணைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இப்போராட்டம் செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435