மத்திய மாகாணத்தில் சுகாதார சேவையாளர் பற்றாக்குறை

மத்திய மாகாணத்தில் சுகாதார சேவையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் பந்துல யாலேக தெரிவித்தார்.

இதனால் சேவையை முன்னெடுத்து செல்வதில் பாரிய சவாலொன்றை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும், சுமார் 300 வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்றும் தெரிவித்த அவர் சில கிராமிய வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியரேனும் இல்லாத நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ​போதே அவர் இதனை தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435