மலேஷியா செல்வதற்கான மருத்துவ பரிசோதனையில் புதிய மாற்றம்

இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து மலேஷியா செல்லும் பணியாளர்கள் தீவிரமான மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளனர் என மலேஷிய பிரதிப் பிரதமர் அஹமட் ஷைட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் இச்சட்டமானது மலேஷியாவில் பணியாற்றும் வௌிநாட்டவர்களின் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, பணியாளர் ஒருவர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாகவும், மலேஷியா சென்று ஒரு மாதத்தின் பின்னரும், ஒப்பந்த காலத்தின் ஒவ்வொரு வருட இறுதியிலும் இந்த மருத்துவ சோதனைகள் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435