மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணியில் நேற்று 101 பேருக்கு கொரோனா

கம்பஹா – மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளது.

திவுலப்பிட்டியில், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுதியானதை அடுத்து, நேற்றிரவு வரை 101 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 69 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக மேலும் 32 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

மினுவாங்கொடையை சேர்ந்த 18 பேருக்கும், குருநாகலையை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணம், மொனராகலை, சீதுவ, ஜா-எல, மற்றும் மஹர முதலான பகுதிகளை சேர்ந்த தலா ஒவ்வொருவருக்கும்   தொற்றுறுதியானது.

கட்டானையை சேர்ந்த 2 பேருக்கும், மீரிகமயை சேர்ந்த 3 பேருக்கும் தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் 111 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 513 ஆக உயர்வடைந்துள்ளது.

3 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435