மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு பட்டதாரிகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்றும் (06) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

கல்லடிப் பாலததில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிவரைச் சென்றனர்.

வேலையற்ற பட்டதாரிகள் கச்சேரி நுளைவாயிலை அடைந்து அரசாங்க அதிபரைச் சந்திக்க முற்பட்டனர். அனைவரும் அரசாங்க அதிபரைச் சந்திப்பதற்கு முடியாது குறிப்பிட்ட 5 பேர் மாத்திரம் சந்திக்க முடியும் என பொலிசார் தெரிவித்ததையடுத்து தமது மகஜரைருடன் 5 பேர் மாத்திரம் அரசாங்க அதிபரைச் சந்தித்து மகஜரைக் கையளித்தனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவத 01.10.2017 அன்று மாகாணசபையால் நடாத்திய ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளைப் பெற்ற பல பட்டதாரிகள், ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்கபபடவில்லை.

அரசாங்கம் இவ்வருட (2017) இறுதிக்குள் வழங்குவோம் என வழங்கப்பட்ட வாக்குறுதி (அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள்) இதுவரையில் வழங்கப்படவில்லை. ஆண்டு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

இவ்விரண்டு நியமனங்கள் தொடர்பாக கவனத்திற் கொண்டு இவ்வருட இறுத்திக்குள் நியமனங்களை உடனடியாக வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- எழுவன் நியுஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435