மீண்டும் திறக்கப்பட்ட லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலயம்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, மூடப்பட்ட பொலனறுவை லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலயமும், பிரதேச சபையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

கடந்த ஜுலை 30 ஆம் திகதியும, ஓகஸ்ட் 03 ஆம் திகதியும் லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலயத்தின் உதவியாளர் மற்றும் சிவில் பாதுகாப்பு சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து, லங்காபுர பிரதேச செயலாளர் காரியலயம் மற்றும் பிரதேச சபையை மூடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார தரப்பினர் மேற்கொண்டனர்.

அத்துடன், அந்த பகுதியை சேர்ந்த சுமார் 891 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த காரியாலங்களில் பணியாற்றிய பணிக்குழாமினர் இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்க முடியும் என லங்காபுர சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது

இதேவேளை, தொடர்ந்தும் 30 குடும்பங்களை சேர்ந்த 130 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக லங்காபுர சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435