மேன்பவர் நிறுவனத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குக!

இலங்கை மின்சாரசபையில் பணியாற்றும் மேன்பவர் 4000 பேரை விரைவில் நிரந்தர நியமனம் வழங்குமாறு மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலாலில் கையொப்பத்துடனான கடிதம் மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு அனுப்பி கைக்கப்பட்டுள்ளது.

உறுதியளித்தாற் போல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நியமனக்கடிதங்கள் கையளிக்கப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேன்பவர் நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் மின்சாரசபை ஊழியர்களில் நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு வழங்குமாறு பல தடவைகள் கடிதம் மூலம் தெரியப்படுத்துள்ளது. எனினும் அக்கடிதங்களுக்கு சரியான பலன் இதுவரை கிடைக்கவில்லை. எனவே உறுதியளித்தத்தற்கமைய குறித்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறும், இது தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வழங்குமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே உறுதியளித்தாற்போல் ஒக்டோபர் 17ஆம் திகதி நியமனக்கடிதங்கள் வழங்கப்படாத பட்சத்தில் என்னவகையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பில் மேன்பவர் நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு தௌிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435