மேலதிக ஆசிரியர்கள் இடமாற்றம்- சுற்றரிக்கை விரைவில்

பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய புதிய இடமாற்றக்கொள்கைக்கு அமைவாக சுற்றரிக்கை வெளியிடப்படும் என்று பொலன்னறுவை சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலய புதிய கட்டிட திறப்புவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி சீராக வேண்டும் என்பதற்காக இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகைகள் கிடைக்காமல் இருக்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435