மேல் மாகாணத்தில் தமிழ்மொழிமூல 99 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்

மேல் மாகாணத்தில் தமிழ் மொழி மூல 99 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கலை, வர்த்தகம் மற்றும் விஞ்ஞான பட்டதாரிகள் 99 பேருக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ரா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டவர்கள், எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் மாகாண பாடசாலைகளில் தங்களின் கடமைகளை பொறுப்பேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் அவர்கள் கடமையாற்றவுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு சேவை முன் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. 33 நாட்களுக்கு வழங்கப்படும் இந்தப் பயிற்சிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435