ரயில்வே துறையினர் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு 

ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் மாற்றம் இல்லை என ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவையின் தரங்களில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக அந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் உட்பட சில தொழிற்சங்கத்தினர் இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே சேவையின் தரங்களில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் தற்போதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தொடரூந்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435