ரயில்வே பணிப்புறக்கணிப்பு ரத்து

இன்று (20) நள்ளிரவு ரயில்வே ஊழியர்கள் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பணியாளர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பிரதி போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட தீர்மானித்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தமது பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுப்பதாக பிரதியமைச்சர் உறுதியளித்ததாகவும் பிரதமர் தொலைபேசியில் தம்முடன் உரையாடியதாகவும் கட்டுப்பாட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435