ரயில் இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு

ரயில் இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தினர் நேற்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பணிப் புறக்கணிப்பு தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆட்சேர்ப்பு பொறிமுறையை மறுசீரமைப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ரயில் இயந்திர சாரதிகள் உதவியாளர்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு ஏனைய சில சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரயில் இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் உப தலைவர் பி ஏ டி பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும், ரயில் இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் இந்த போராட்டத்தினால் ரயில் போக்குவரத்துக்கு சேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

எனினும், பிரதமரின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்தையை அடுத்து பணிப் புறக்கணிப்பை கைவிட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர்; இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இன்று கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாக உறுதி மொழியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இந்த பணிப் புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர்; இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435