ரயில் திணைக்களத்திற்கு 500 மில். ரூபா நட்டம்

ரயில் திணைக்கள வளாகத்தில் ஔிபரப்பப்படும் வர்த்தக விளம்பரங்களுக்காக தனியார் நிறுவனமொன்றிடமிருந்த அறிவிடப்படவேண்டிய 500 மில்லியன் ரூபா இது வரை அறவிடப்படவில்லை என்று ரயில் திணைக்கள தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் ரயில் திணைக்கள பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் எஸ். பீ. விதாதனகே கருத்து தெரிவிக்கையில் 500 மில்லியன் ரூபாவுக்கு பதிலாக இதுவரை வெறுமனே 24 மில்லியன் ரூபா மட்டுமே அறிவிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் விளப்பர ஒளிபரப்பு தொடர்பில் தனியார் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சரியான வரி வீதங்களை செலுத்தாத காரணத்தினால் அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. எனினும் இன்னும் செலுத்த வேண்டிய வரித்தொகையை அறிவிடுவதற்கு ரயில் திணைக்கள ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435