வங்கி தரவுகள் களவாட முயன்ற வௌிநாட்டவர்கள் கைது

பண்டாரமுல்ல, மிரிஸ்ஸ பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் தரவுகளை களவாட முயன்ற நான்கு வௌிநாட்டவர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கேரியா,எஸ்தோனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவரும் போலாந்தைச் சேர்ந்த இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், நேற்று மாலை மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தில் தரவுகளை களவாடுவதற்கான இலத்திரனியல் கருவியொன்றை பொருத்த முயன்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக நிறுத்தப்படவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435