வடக்கில் 18085 விசேடத் தேவையுடையவர்கள்!

யுத்தம் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 18085 பேர் விசேட தேவைக்குட்பட்டவர்களாகியுள்ளனர் என்று சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா நேற்றுமுன்தினம் (20) எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோருக்கு மாதாந்த கொடுப்பனவு 4163 பேருக்கு வழங்கப்படுகிறது. ஏனைய 11625 பேர் விசேட தேவையுடையவர்களாக அடையாளங்காணப்பட்ட போதிலும் எவ்வித கொடுப்பனவும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஏனைய மாகாணங்களில் உள்ள விசேட தேவையுடையவர்களுக்கு மாகாணசபைகளினூடாக உதவித் தொகை வழங்கப்படுகிறது. எனினும் வட மாகாணத்தில் அச்செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை. முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றதாகவே நாம் நம்புகிறோம்.

விசேட தேவைக்குரியவர்களுக்கான கொடுப்பனவை தகுதிபெற்ற அனைவருக்கும் வழங்க 2017 வரவுசெலவு திட்டத்தினூடாக நிதியொதுக்கப்படும். அடுத்த ஆண்டு உதவித் தொகை வழங்குவதற்கான பட்டியலில் 39758 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435