வடக்கு விஞ்ஞான ஆசிரியர்களுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி மே மாதம ஐந்தாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண பொதுசேவை

ஆணைக்குழுவின் செயலாளர் ரூ. வரதலிங்கம் அறிவித்துள்ளார்.

விஞ்ஞான ஆசிரியர்களாக பட்டதாரிகளை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு- 1 (அ) தரப் பதவிக்கு சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலமே நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்ட விடயங்களில் மாற்றங்கள் இல்லையெனவும் விண்ணப்பிப்பதற்கான காலமே நீடிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலதிக விபரங்களை வட மாகாண இணையதளமான www.np.gov.lk வில் Recruitment and Exam Advertiesment என்ற பகுதியில் பெற்றுக்கொள்ள முடியும்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435