வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (23) யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

காலை 9 மணியளவில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நீண்டகாலமாக வேலைவாய்ப்புகள் இன்றி அவதியுறுவது மட்டுமன்றி அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பியும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அதனால் தாம் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள், மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435