வட மத்திய மாகாணசபை வேலையற்ற பட்டதாரிகளால் முற்றுகை

வட மத்திய மாகாணசபைக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் மறித்து மாகாண வேலையற்ற பட்டதாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் வட மத்திய மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் பின்னர் மாகாணசபைக்கு உள்நுழையும் அனைத்துப் பாதைகளையும் மறித்து போராட்டத்தை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மத்திய மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகத்தேர்வின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 478 பேருக்கு நேற்று (25) நியமனம் வழங்கியுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த பலருக்கும் நியமனங்கள் இன்னமும் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435