வட மாகாணத்தில் 70 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம்

வட மாகாண தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (02) காலை 11.00 வட மாகாண கல்வியமைச்சில் நடைபெறவுள்ளது.

தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு மனைபொருளியல் பாடத்துறைக்கும் சிங்கள மொழி மூலம் 13 வகையான பாடத்துறைகளுக்குமாக 70 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான அழைப்பிதல்கள் அவர்களுடைய சொந்த முகவரிகளுக்கு ஏற்கனவே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை போட்டிப்பரீட்சையின்றி நேர்முகப்பரீட்சையினூடாக குறித்த ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் வட மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதிலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையான விண்ணப்பங்கே கிடைத்தமையினால் போட்டிப்பரீட்சையின்றி குறித்த ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435