வட மாகாண சுகாதார தொண்டர் – அமைச்சர் சந்திப்பு

நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி தொடர்ந்து 86 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடமாகாண சுகாதார தொண்டர் பணியாளர்கள் மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வவுனியா உப அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, யுத்த காலம் முதலே தாம் பணியாற்றி வருவதாகவும் நிரந்தர நியமனமின்றி தமது குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சருக்கு விளக்கினர்.

அதனை செவிமடுத்த அமைச்சர், இவ்விடயம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு தாம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தொண்டர்களின் நிரந்தர நியமனத்திற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் எடுத்தியம்பினார். மேலும் குறித்த தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

நீண்ட காலம் சுகாதார தொண்டர்களாக பணியாற்றிவரும் சுமார் 40 பேர் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435