வவுனியா மாவட்டத்தில் அரச ஊழியர் பற்றாக்குறை

வவுனியா மாவட்டத்தில் அரச ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுவதனால் அரச பணிகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் நிலவுவதாக மாவட்டச் செயலாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் 102 கிராம சேவர்கள் தேவைப்பட்ட ​போதிலும் தற்போது 62 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதனால் தற்போது கிராம அதிகாரிகளை தெரிவு செய்வதற்கான பரீட்சை நடத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் அவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், தொழில்நுட்ப அதிகாரிகள், சமுரதி அபிவிருத்தி அதிகாரிகள், சமுர்தி முகாமையாளர்கள் பதவிகளிலும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

மாவட்டத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறையினால் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435