வவுனியா ரயில் கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை காப்பாளர்கள் வவுனியா ரயில் நிலைய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது ஊதியத்தை அதிகரிக்குமாறு கூறியும், நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் நாடு பூராகவுமுள்ள பதுகாப்பற்ற ரயில் கடவை காப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி வவுனியாவில் அந்த சேவையில் உள்ளவர்களும் நேற்று காலை (12) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாளொன்றுக்கு வழங்கப்படும் 250 ரூபா சம்பளம் போதுமானதல்ல என்று கூறி ரயில் கடவை காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பெரும்பாலான பதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பொலிஸாரும் புகையிரத திணைக்கள ஊழியர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேலைத்தளம்/ அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435