வாக்குறுதி வழங்கினால் சஜித்துக்கு வாக்களிப்போம் – வேலையற்ற பட்டதாரிகள்

வாய்மூல உறுதிமொழிகளை தவிர்த்து எழுத்துமூல உறுதி மொழி வழங்கப்படின் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்போம் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே. அனிர்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பல கஷ்டங்களுக்கு மத்தியில் பட்டதாரிகளாகிய நாம் இன்று வேலையற்று இருக்கிறோம். கடந்த 2014ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை சுமார் 2300 பேர் வேலையற்ற படடதாரிகளாக எமது சங்கத்தில் இணைந்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எமக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை. அந்த அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை.

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் தாம் வெற்றிபெற்றால் இரு மாதங்களில் பட்டதாரகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக பிரசார கூட்டமொன்றில் கூறியுள்ளார். இதனை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.

எதிர்வரும் 9ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள வரவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் நாம் எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம். இதனை ஏற்றுக்கொண்டு எமக்கு வாக்குறுதியை வழங்கினால் நாம் இம்முறை தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களிப்போம். அவ்வாறின்றேல் நாம் வாக்களிப்பை பகிஷ்கரிப்போம். இப்பகிஷ்கரிப்பில் சுமார் பத்தாயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435