விமானிகளிடம் தொடர்ச்சியாக போதை பொருள் பாவனை பரிசோதனை

விமானிகளிடம் எப்போதாவது நடத்தப்படும் போதை பொருள் பாவனை பரிசோதனையை தொடர்ச்சியாக நடத்துமாறு ஶ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் நன்மை கருதி மேற்படி பரிசோதனையை தொடர்ச்சியாக நடத்துமாறு ஶ்ரீலங்கா எயார் லைன்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு உயர்ந்த சேவையையும் பாதுகாப்பையும் வழங்குவதில் ஶ்ரீ லங்கா எயார் லைன்ஸ் எப்போதுமே பின்னிற்பதில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை சிவில் விமானசேவை அதிகாரசபையின் உத்தரவுக்கமைய விமானி மற்றும் விமான பணியாளர்கள் அனைவரிடமும் போதை பொருள் பாவனை பரிசோதனை நடத்துவது கட்டாயமாக்கபட்டுள்ளது.

கடமை நேரத்தில் இப்பரிசோதனையை புறக்கணிப்பது விமான சேவை சட்டதிட்டங்களை மீறும் செயலாக கருதப்படுவதுடன் நன்னடத்தை தொடர்பான பிரச்சினையாகவும் கருதப்படும் என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435