விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பியுங்கள்

பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் நிலவும் 3850 விளையாட்டுப் பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நேற்று (15) மாலை 3.00 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை மற்றும் அநேகரின் வேண்டுகோள் என்பவற்றை கருத்திற்கொண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய விண்ணப்பங்கள் எதிர்வரும் 29ம் திகதி வரை அனுப்ப முடியும் என்று அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435