வீட்டுப்பணி உதவியாளர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவம்

ப்ரொடெக்ட் தொழிற்சங்க அங்கத்தவர்களான வீட்டுப்பணி உதவியாளர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவத்தை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு நாராஹேன்பிட்டவில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

வீட்டுப்பணி உதவியாளர்களுக்கும் கண்ணியமான வேலை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதலாம் கட்டம் இம்மாதம் 7ம் திகதி நாராஹேன்பிட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

வீட்டுப்பணி உதவியாளர்கள் சுமார் 40 பேர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.

ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் சார்பில் அதன் கணக்காளர் லசந்த குமார இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

rbt

rbt

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435