குவைத்திற்கு பணிப்பெண்கள் அனுப்புவதில்லை- இந்தோனேஷியா தீர்மானம்

இனிவரும் காலங்களில் இந்தோனேஷிய பெண்களை குவைத்திற்கு பணிப்பெண்களாக அனுப்புவதில்லை என்று இந்தோனேஷிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வீட்டுப்பணிப்பெண்கள் உட்பட ஏனைய பணியாளர்களை முறையாக பாதுகாப்பதற்காகவே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் குவைத் அரசிற்கு இந்தோனேஷிய அரசாங்கம் தௌிவுபடுத்தியுள்ளபோதிலும் பணிப்பெண்களை அனுப்புமாறு குவைத் அரசாங்கம் இந்தோனேஷிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனினும் தமது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள இந்தோனேஷிய அரசாங்கம் குவைத் மட்டுமன்றி ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களை அனுப்புவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435