வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைப்பது அடுத்தவாரம் முதல் மீள ஆரம்பம்

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

எனினும் அத்தியாவசியமான தரப்பினர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்த நிலையில், அடுத்த வாரம் முதல் முறையான திட்டத்திற்கு அமைய வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435