வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 21 இலட்சத்து 57 ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான சிகரட் தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குருணாகலை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரும், அலுத்கம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை , சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த 42 வயதுடைய நபரொருவரிடம் இருந்து சட்ட விரோத சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாரவில பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரிடம் இருந்து 1,010,000 ரூபாய் பெறுமதியான சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றைய நபர் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்துமாறு சுங்கம் உத்தரவிட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435