பணிப்பகிஷ்கரிப்பில் தோட்டத் தொழிலாளர்கள்

அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழியங்கும் ஹப்புத்தளை மற்றும் போவ இதல்கஸ்ஹின்ன தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் இன்று (11) ஈடுபட்டுள்ளனர்.

அத்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பெப்ரவரி மாத வேதனம் இதுவரை கொடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

மாதாந்தம் 10ம் திகதி தோட்டத்தொழிலாளர்களுக்கு வேதனம் வழங்கப்படுகிறது. எனினும் இம்முறை 11ம் திகதியாகியும் வேதனம் வழங்கப்படவில்லை.

தொழிற்சங்க வேறுபாடுகள் இன்றி அனைவரும் இப்போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளதுடன் சம்பளம் வழங்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435