வேலைநிறுத்த ஏற்பாட்டில் பெற்றோலிய தொழிற்சங்க உறுப்பினர்கள்

இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபன சுதந்திர தொழிற் சங்க உறுப்பினர்கள் வேலைநிறுத்தமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியே இவ்வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க போவதாக தொழிற்சங்கத்தின் பிரதித் தலைவர் பிரேமரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்றும் பிரதித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிற்சங்கத் தலைவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை கண்டறிந்ததையடுத்தே நிறுத்தப்பட்டுள்ளார் என்று சுதந்திர சேவையாளர் சங்கத்தின் மாற்றுக் குழுவின் பிரதிநிதி ருவன் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435