வேலையில்லா பட்டதாரிகளின் அரசியல் கட்சி உதயம்

வவுனியா மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் புதிய அரசியல் கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணி என்ற பெயரில் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக்கட்சியின் தலைவராக எம். ஆனந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக ஜெ. சந்திரபிரகாஷ், தேசிய அமைப்பாளராக ரி. ரஜனிகாந்த், ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் சின்னமாக இரட்டை மின்சார கோபுரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், கட்சியின் மூவர்ணக் கொடியினையும் தலைவர் அறிமுகம் செய்திருந்தார்.

எமது மக்களின் உரிமை மற்றும் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு எவ்வித இன, மத பேதமுமின்றி ஒற்றுமையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்களை வலியுறுத்துவதுடன், மூவின கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனநாயக மக்கள் முன்னணி செயற்படும் என்று தலைவர் எம்.ஆனந்தராஜா இதன் ​போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435