வைத்தியர்கள் மீது தாக்குதல்- நடவடிக்கை எடுக்காத பொலிஸ்

களுத்துறை பொது வைத்தியசாலைக்குள் புகுந்த குண்டர்கள் வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரம் கடந்த நிலையில் இன்னமும் விசாரணைகள் மேற்கொள்ளவில்லையென்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சரின் அரசியல் ரீதியாக நெருக்கமானவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் அனைத்து குண்டர்களின் முழுமையான விபரங்களுடன் களுத்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று கடந்த 26ம் திகதி உதவிச் செயலாளர் டொக்டர் நவீன்த சொய்ஸா மீதும் மற்றும் களுத்துறை பொது வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435