வௌிவாரி பட்டப்படிப்புக்கான அரசின் தீர்மானம்- ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள்!

வௌிவாரி பட்டப்படிபை மேற்கொள்ளவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேகாலை நகரில் இளைஞர் யுவதிகள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான தமது உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறியே இவ்விளைஞர் யுவதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

க.பொ.உயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைகழகத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்காத சுமார் 350 இளைஞர் யுவதிகள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துககொண்டனர்.

வௌிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்துமாறு கூறி அரசாங்கம் வௌியிட்ட சுற்றுநிருபத்தில் உடனடியாக ரத்து செய்யுமாறும் தமது கோரிக்கையை அரசாங்கம் பரிசீலித்து பார்க்கும் வரை தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளப்போவதாகவும் இவ்விளைஞர் யுவதிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435