ஶ்ரீலங்கன்ஸ் விமானசேவை இடைநிறுத்தம் 30ம் திகதி வரை நீடிப்பு

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானசேவை இடைநிறுத்தம் இம்மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஶ்ரீலங்கன் விமானசேவை கடந்த மாத நடுப்பகுதியில் இடைநிறுத்தப்பட்டது. எனினும் சரக்கு விமான சேவை தொடர்ச்சியான நடைபெற்று வருவதுடன் விசேட தேவைகளுக்கேற்ப விமான சேவைகள் நடைபெற்று வரும் நிலையில் பயணிகள் போக்குவரத்து எதிர்வரும் 30ம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு போக்குவரத்து முகவர் மற்றும் அருகிலுள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது சர்வதேச தொடர்பு நிலையத்துடன் +94117771979 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்று ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435