​தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

நேற்று (03) நள்ளிரவு தொடக்கம் தபால் திணைக்கள சில ஊழியர் சங்கம் வேலைநிறுத்தப் ​போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று (04) சேவைக்கு சமூகமளித்தவர்களை கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் தபால்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாக தபால் நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தபால் நிலையங்களில் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தாலும் பணிக்கு சமூகமளித்த அதிகாரிகளைக் கொண்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தபால்நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்கள் இணைப்பில் காணப்படும் சில குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி தபால் திணைக்கள ஊழியர்கள் அனைவரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் திணைக்கள ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435