​தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 1100 வெற்றிடங்கள்

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 1100 விரிவுரையாளர்கள் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும் அவற்றில் அவர்களில் 500 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரிகளுக்கான போட்டிப் பரீட்சையொன்றும் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்டது. அவர்களில் இறுதி நேர்முகத் தேர்வுக்கு சுமார் 600 பேர் தெரிவாகியுள்ளனர். அவர்களில் நேர்முகத்தேர்வுக்குப் பின்னர் 500 பேர் மட்டுமே நியமனத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று அமைச்சின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெரிவு செய்யப்பட்டோருக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதுடன் மிகுதி வெற்றிடங்களுக்கான ஆட்தேர்வு செய்வதற்கு மீண்டும் வர்த்தமானியில் அறிவிப்பு வௌியிடப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம்- திவயின

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435