‍ஆசிரிய நியமனம் பெறுவோருக்கான விசேட கூட்டம்

கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து எதிர்வரும் 20ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள டிப்ளோமாதாரிகளுக்கான விசேட கூட்டமொன்று இன்று (10) கல்வியமைச்சில் நடைபெறுகிறது.

ஆசிரியர்களுக்கு எந்த பாடசாலைகளில் நியமனம் வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இவர்கள் இன்று கல்வியமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் அமைச்சில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் ஆசிரியர்கள் அவர்கள் வதிவிடம் மற்றும் விருப்பத்திற்கமைய பாடசாலைகளை தீர்மானித்துக்கொள்வதற்காக இவ்வேற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் உயரதிகாரி ஒருவர் சகோதர மொழி தேசிய பத்திரிகையான ‘திவயின’விற்கு தெரிவித்தார் என்று அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மாகாணசபை பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு இவ்வாசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- திவயின

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435