12 ஆயிரம் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த 12,000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இம்மாதம் ஆறாம் திகதி வரை நாடு முழுவதிலும் நடத்தப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புக்களிலேயே இவ்வர்த்தகர்களிடம் அபராதப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் மட்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான அபராதப்பணம் அறிவிடப்பட்டுள்ளது என்றும் கண்டியில் 4.3 மில்லியன் ரூபாவும் குருநாகல் மாவட்டத்தில் 3.6 மில்லியன் ரூபாவும் அபராதமாக அறிவிடப்பட்டுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435