2019ம் ஆண்டில் 49 ஊடகவியலாளர்கள் கொலை

கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் 49 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 57 பேர் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர், 389 பேர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) தெரிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் உலகில் 941 ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் 63 வீதமானவர்கள் கொலை செய்யப்பட்டு அல்லது வேண்டுமென்றே இலக்கு வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2003ம் ஆண்டுக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் 2019ம் ஆண்டிலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மூலம் – CNN

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435