மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள அரச ஊழியர்கள் சம்பளம்!

எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரச ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அரச சேவை சம்பள மீளாய்வு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கமைய இரு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அச்சம்பள அதிகரிப்பின் 50 வீதம் 2020ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் வழங்கப்படவிருந்தது. மிகுதி 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் ஜூலை மாதம் அதிகரிக்கப்படவிருந்த அரச ஊழியர்களின் சம்பள உயர்வு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435