தோட்டத் தொழிலாளருக்கு ஆதரவாய் யாழ் பல்கலைக்கழகம்!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் கடந்த 18 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (14) நடத்தப்பட்டது.

யாழ் மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவுகளை வெளிப்படுத்தினர்.

தோட்டத்தொழிலார்களின் விடயத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆயிரம் ரூபா சம்பளமும் வாரத்தில் ஆறுநாள் வேலை வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டங்களை அண்மைக்காலமாக  நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435