பாலியல் லஞ்சம் கேட்ட உப முகவர் கலேவலயில் கைது

வௌிநாடு செல்ல எத்தனிக்கும் பெண்களை ஏமாற்றி பாலியல் லஞ்சம் பெறும் உப முகவர் ஒருவர் கலேவல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டுப் பணிப்பெண்ணாக செல்லவிருந்த பெண்ணொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கமையவே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் போலி ஆவணங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வௌிநாடு செல்ல விரும்பும் பெண்களுடைய கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை பெற்று அவற்றுக்கு ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் அனுப்பி அப்பெண்களை அசௌகரியங்களுட்படுத்தியுள்ளார். மேலும் அப்பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரி வற்புறுத்தியுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கலேவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435