மாகம்புர முன்னாள் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று (09) உண்ணாவிரத போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

தமது கோரிக்கைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வுண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகம்புர துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஐ.கே.ஒமேஷ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக 439 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு முன்னர் நவம்பர் 30ம் திகதி குறித்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு இதுவரை எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இதேவேளை, தொழில் இழந்த தமது பிள்ளைகளுக்கு தொழில் பாதுகாப்பை வழங்குமாறு ​கோரி தொழில் இழந்தவர்களின் பெற்றோர் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டமும் துறைமுக நுழைவாயில் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435