382 புதிய ஆசிரியர்களை இணைக்கும் நேர்முகப்பரீட்சைக்கான திகதி இதோ

சப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கோப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி சப்ரகமுவ மாகாண சபைக் கேட்போர் கூடத்தில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற இரத்தினபுரி வலய அதிபர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சப்ரகமுவ மாகாண ஆளுநர் இதனை தெரிவித்தார்.

இந்த மாதம் 24 மற்றும் 25திகதிகளில் இரத்தினபுரியில் அமைந்துள்ள மாகாண கேட்போர் கூடத்தில் இதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் பரீட்சைத் திணைக்களத்தால் கடந்த 31.03.2019 இல் நடத்தப்பட்ட திறந்த போட்டித் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இதற்காக நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நன்றி – தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435