47 ஆயிரம் தொழில்கோரும் பட்டதாரிகள் இலங்கையில்

இலங்கையில் 47ஆயிரம் தொழில்கோரும் பட்டதாரிகள் உள்ளனர் என சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.

அரச நிர்வாக பணிகளில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு ஒன்று நேற்று இடம்பெற்றது

இதன்போது உரையாற்றியபோதே மேற்கண்ட தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அரச சேவையில் இணைந்துக்கொள்ள 47 ஆயிரம் பட்டதாரிகள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையில் தம்மை இணைத்துக்கொள்ளுமாறு கோரி, நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 விண்ணப்பங்கள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் அரச சேவையின் அளவை அரசாங்கம் குறைத்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன

எனினும், கடந்த மூன்று வருடங்களில் 20ஆயிரம் பேரை அரசாங்கம் அரச சேவைக்குள் உள்ளீர்த்துள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435