ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல்

எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் தவிரந்த ஏனைய மாவட்டங்களில், ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் அமுல்படுத்தப்படுகிறது.

அந்த மாவட்டங்களில் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 11ஆம் திகதிவரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435